தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்!

தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்!

in Society / Events

சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கிற்கு செண்டை மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தவில், நாதஸ்வர கலைஞர்கள் இசையுடனும், மயிலாட்டம், ஒயிலாட்டம் என தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த கலை நிகழ்ச்சிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிபர் ஜீ ஜிங் பிங்க் கண்டு ரசித்தார். வரவேற்பு முடிந்து ஹாங்கி 5 எல் ரக குண்டு துளைக்காத பிரத்யேக காரில், கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு அதிபர் புறப்பட்டார். வழி நெடுகிலும் அதிபருக்கு பள்ளி மாணவர்கள் இரு நாட்டு கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அதிபர் ஓட்டலுக்கு ஓய்வெடுக்க சென்றடைந்தார்...

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top