கன்னியாகுமரி அருகே நான்குவழிசாலையில் பைக் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி அருகே நான்குவழிசாலையில் பைக் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

in News / Local

அஞ்சுகிராமத்தை அடுத்த ஸ்ரீலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் சிவா என்ற பரமசிவன்(20). அதே ஊரை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் வினிஸ்ராஜ்(20). இருவரும் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். மேலும் இருவரும் நண்பர்கள்.அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து நான்கு வழிசாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை வினிஸ்ராஜ் ஓட்டினார். சிவா பரமசிவம் பின்னால் இருந்துள்ளார். அவர்கள் மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து நான்குவழிசாலையில் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

அவர்கள் நரிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பைக் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு வேலியில் மோதியது. இதில் பைக் சுமார் 25அடி தூரம் தூக்கி வீசப்பட்டது .இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலைசிதைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வெனிஸ்ராஜை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top