சேலத்தில் ஹெல்மெட் குறித்த பல்வேறு அறிவிப்புகளை சேலம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் சேலத்தில் ஹெல்மெட்டிற்கான மவுசும் தேவையும் அதிகமானது. ஹெல்மெட் இல்லாமல் சென்றால் அபராதம் என்ற நிலை மாறி ”நோ ஹெல்மெட் நோ என்ட்ரி” என்ற வாசகத்துடன் காவல்துறை கெடுபிடி விதிப்பதால் ஹெல்மெட் வாங்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வாகன ஓட்டிகல் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹெல்மெட்டை விற்பதற்கு புதிய வியாபார உக்தியை சேலம் இளைஞர் கையில் எடுத்துள்ளார். அதன்படி அவரிடம் ஹெல்மெட் வாங்கும் அனைவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்பது தான் அவரது வியாபார உக்தி. தாறுமாறாக உயர்ந்து இருக்கும் வெங்காயத்தை இலவசமாக கொடுக்கும் பொழுது யார் தான் வேண்டாம் என்பர்.
இதனால் ஹெல்மெட் ஒன்று வாங்க வேண்டும் என பலநாள் நினைத்தவர்களும் ஆடி ஆஃபருக்கு முந்துவது போல் முந்தி ஹெல்மெட்டை வாங்கி வருகிறார்கள். இதுகுறித்து அந்த இளைஞர் கூறுகையில் வியாபாரத்தில் லாபத்தை விட கஸ்டமர் தான் முக்கியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
0 Comments