2–வது நாளாக குமரி எல்லையில் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

2–வது நாளாக குமரி எல்லையில் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

in News / Local

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் எதிரொலியாக கேரளா செல்லும் பேருந்துகள் 2–வது நாளாக குமரி எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

நாடு முழுவதும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்திலும் சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அணைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆனால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் குமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது. இதே போல் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்தநிலையில் தொழிற்சங்கத்தின் சார்பில் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக கேரளாவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. அதேபோல் கேரளா செல்லும் தமிழக பேருந்துகளும் குமரி எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top