கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை - 3 பேர் கைது!

கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை - 3 பேர் கைது!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை கும்பல் முகாமிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நாகர்கோவில் பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அப்போது, வடசேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த 3 நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது 3 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால் அவர்கள் வைத்து இருந்த பைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் 1 கிலோ கஞ்சா வைத்து இருந்தும் 3 பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, வடசேரி போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் அவர்கள் 3 பெரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஊசி மணிகண்டன், சதீஷ் மற்றும் பாபு என்பதும் இவர்கள் 3 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா எப்படி கிடைத்தது, வேறு யாராவது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top