சென்னையில் இறந்த நபர் உயிரோடு இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து ரூபாய் 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்த பெண் உட்பட 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
2009-ம் ஆண்டு மறைந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமாக 1035 சதுர அடி நிலம் நந்தம்பாக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் வேறொரு நபரை இவர் தான் பெருமாள் என ஆள் மாறாட்டம் செய்து, 2013-ல் அவரிடம் இருந்து அந்த நிலத்தை வாங்கியது போல ரகுக்குமார் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து அதனை அபகரித்துள்ளார்.
அந்த இடத்தை தனது மனைவி ஜெயக்குமாரி பெயரில் பத்திர பதிவு செய்த விவகாரம் தெரிந்து, நிலத்திற்கு சொந்தகாரரான பெருமாளின் மகன் கோபி என்பவர் கொடுத்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவின் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த மோசடியில் ரகுக்குமார் அவரது மனைவி ஜெயக்குமாரி மற்றும் உடந்தையாக இருந்த போத்திராஜ் ஆகியா 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சரவணன் என்ற நபரை தேடி வருகின்றனர்.
0 Comments