விபத்தில் 3 பேர் படுகாயம்,  சிறுமியை  ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு!

விபத்தில் 3 பேர் படுகாயம், சிறுமியை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு!

in News / Local

வெள்ளிச்சந்தை அருகே ஸ்கூட்டர், பைக் மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுமியை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளை பகுதியை சேர்ந்தவர் முகமது நவ்பால் (40). இவருக்கு சொந்தமான ஸ்கூட்டரை, 16 வயது நிரம்பிய இவரது மகள் நேற்று முன் தினம் ஓட்டி சென்றுள்ளார். அதில் மொத்தம் 3 பேர் சென்றுள்ளனர். செக்கடிவிளை அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வட்டம் பகுதியை சேர்ந்த ஜோஸ் (31) தனது பைக்கில் துளசி (37) என்பவரை பின்னால் உட்கார வைத்து கொண்டு வந்துள்ளார். அவரது பைக், சிறுமி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதி உள்ளது. இதில் சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். - சிறுமிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி, ஜோஸ் மீது அதி வேகம் மற்றும் அஜாக்கிரதையாக பைக் ஓட்டி வந்ததாக வழக்குபதிவு செய்தனர்.
மேலும் 16 வயது சிறுமியிடம் ஸ்கூட்டரை ஓட்ட கொடுத்ததாக அவரது தந்தை முகமது நவ்பால் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top