திருவட்டார் அருகே ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

திருவட்டார் அருகே ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

in News / Local

திருவட்டார் அருகே மாத்தார் தைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சிசில். இவருக்கு அஜிதா(35) என்ற மனைவியும், ஸ்ரீஜேஷ்(12), ஸ்ரீசாந்த்(9) என 2 மகன்களும் உள்ளனர்.

சிசில், ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இதனால், அஜிதா தனது 2 மகன்களுடன் தைவிளாகத்தில உள்ள வீ்ட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 5-ந்தேதி அன்று அஜிதா மகன்களுடன் மார்த்தாண்டம் கல்லுதொட்டியில் உள்ள தனது தயார் வீ்ட்டுக்கு சென்றிருந்தார். நேற்று மாலை வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, குளிர்சாதன பெட்டியின் மீது வைத்திருந்த படுக்கை அறை சாவியை தேடினார். அது மாயமாகி இருந்தது. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டு இருந்தது.

பின்னர், மாற்று சாவியின் மூலம் அறையை திறந்து பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும், அறை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை, ரூ. 2 லட்சமும் மாயமாகி இருந்தது.

அஜிதா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு, அறையின் சாவியையும் எடுத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.மேலும், மோப்பநாய் ஏஞ்சலும் வரவழைக்கப்பட்டது அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top