3 வயது பெண் குழந்தை கடத்தல், நாகர்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

3 வயது பெண் குழந்தை கடத்தல், நாகர்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

in News / Local

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சந்தை விளை பகுதியைச் சேர்ந்த சடையன் மற்று அவரது மனைவி தேவி, மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் துப்புரவு பணிகளை முடித்து விட்டு, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது வீட்டிற்குச் செல்ல பேருந்து இல்லாததால், தங்களது 3 வயது பெண் குழந்தை வீரம்மாளுடன், பேருந்து நிலைய நடைமேடையில் படுத்து தூங்கினர். அதிகாலை எழும்பி பார்த்தபோது, அருகில் படுத்திருந்த தங்களது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். குழந்தையை இழந்த சடையன் தம்பதி, காணாமல் போன குழந்தையின் வரவை நோக்கி கண்ணீரோடு காத்திருக்கின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top