குமரியில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்வு...!

குமரியில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்வு...!

in News / Local

இந்த நிலையில் நேற்று புதிதாக 7 பேரை கொரோனா காவு வாங்கியது. அதாவது நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளையை சேர்ந்த 62 வயது ஆண் கடந்த 21-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதே போல குழிவிளையை சேர்ந்த 76 வயது ஆண் கடந்த 28-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுபோன்று வெள்ளமடத்தை சேர்ந்த 62 வயது பெண்ணும், அழகப்பபுரத்தை சேர்ந்த 76 வயது ஆணும், இனயத்தை சேர்ந்த 60 வயது ஆணும், வடிவீஸ்வரத்தில் ஒரு ஆணும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top