குலசேகரம் அருகே சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வலியாற்றுமுகம் பகுதியிலிருந்து குலசேகரம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையில் சென்றுகொண்டிருந்த காா், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தலைகீழாக கவிழ்ந்து, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள், அருகே இருந்த மதில் சுவரில் மோதி நின்றது.
இதில், காரில் இருந்த 3 பேரும், மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த நபரும் லேசான காயத்துடன் தப்பினா்.
0 Comments