நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிய இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிய இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி!

in News / Local

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியும் காலியிடங்களாக இருந்தன. இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு கடந்த 21-ந்தேதி நடந்தது. இந்த இரு தொகுதிகளிலும், இதே நாளில் தேர்தல் நடைபெற்ற மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கு இன்று (24-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

நடந்து முடிந்த 2 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக வேட்பாளர் நாராயணன் 96, 562 வாக்குகள் பெற்று நாங்குநேரியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32,33 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்துள்ளார். நாங்குநேரியில் ரூபி மனோகரன் பெற்ற வாக்குகள் 61, 450. நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் 2,622 வாக்குகள் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அவர் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த புகழேந்தி 68,646 வாக்குகள் ஆகும். இருவருக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் 44782 வாக்குகள் ஆகும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 2,913 வாக்குகளை பெற்றார்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top