ஆயுத பூஜையை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பொன்னப்ப நாடார் வாடகை கார் ஒட்டுனர்கள் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக 47 வது ஆண்டு ஆயூதபூஜை விழா சிறப்பாக கொண்டாடபட்டது.கார் நிலையத்தில் சரஸ்வதி தேவிக்கு கோவில் அமைத்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் பூஜைகள் நடத்தினர். ஓட்டுனர்கள் தங்களின் கார்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
நாகர்கோவில் வேப்பமூடு நுழைவாயிலை அலங்கரிக்கும் மாவிலை தோரணம், மலர் மாலைகள், மின்னொளியில் பளபளக்கும் அழகிய தோரணங்களால் அலங்கரிகப்பட்டு சரஸ்வதி பூஜை விழாவை திருவிழா மாற்றினர்...இன்னிசைகச்சேரியும் மேலும் ஒரு மிகபெரிய அலங்கரத்தையும் அழகையும் சேர்த்தது அதை காண வருடம் வருடம் மக்கள் வருகை தருவது அதிகரித்துள்ளது....
இந்த இன்னிசை கச்சேரிக்கான மொத்த செலவையும் குமரிமாவட்ட அதிமுக மருத்துவர்அணி செயலாளர்.C.N.ராஜதுரை அவர்கள் வாடகை கார் ஓட்டுநர் நல சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கான செலவை செய்தார்.
அதற்காக CNR குரூப்ஸ் ஆர்கெஸ்ட்ராவை கொண்டு வந்து சினிமாவின் பின்னனி பாடகர் பாடகிகளை பாடவைத்தார்... நிகழ்ச்சியையும் காண வந்தார்...நிகழ்ச்சி நடத்துனர்கள் அவரை வரவேற்று குமரியின் வள்ளல் என்ற பட்டத்தையும் வழங்கி ராஜமரியாதை செய்தனர்....
இதில் நாகர்கோவில் மாநகராட்சி பொன்னப்பநாடார் வாடகைகார் ஓட்டுகள் உரிமையாளர்கள் நல சங்க தலைவர்.ஸ்டிபன். தலைமைதாங்கினார்,செயலாளர். முருகன், பொருளாளர்.ராஜேஷ்,மற்றும் சங்க நிர்வாகிகள் சேர்ந்து 47ம் ஆண்டு சரஸ்வதி பூஜை விழாவை நடத்தினர்...
0 Comments