ஈத்தாமொழி அருகே தெக்குறிச்சி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(40). ஆட்டோ டிரைவர். இவர் ராஜாக்க மங்கலம் சந்திப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத்தலைவராகவும் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரும் இங்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆனால் இவர் சங்கத்தில் சேராமல் இருந்து வந்துள்ளார். இதனால் பிரபாகரனுக்கும், முருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் குடிபோதையில் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் பிரபாகரனுடன் தகராறு செய்து, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து பிரபாகரன்ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments