திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவர் வீட்டின் அருகே விவசாயத்திற்காக 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது
இதனிடையே பிரிட்டோவின் இரண்டே வயதான மகன் சுஜித் வில்சன் இந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த ரிக் இயந்திரத்தின் உருளையில் பழுது ஏற்பட்டுள்ளதால் குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும் புதிதாக தோண்டப்பட்டு வரும் குழியில் மிகப்பெரிய பாறை சிக்கியுள்ளதால் குழி தொடும் பணியில் மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது..
0 Comments