மார்த்தாண்டம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ்ராஜன் (54). இவர் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் செல்லும்போது பின்னால் வந்துக் கொண்டிருந்த மைலோட்டை சேர்ந்த ஆர்வின் ஒட்டி வந்த பைக், இவரது பைக் மீது மோதியது. இதில் அலெக்ஸ் ராஜன், ஆர்வின், அவருடன் வந்த ஜினுனேஸ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக அலெக்ஸ்ராஜன் மகன் ஆக்ஸ்ட்ரோ அளித்த புகாரின் பேரில் ஆர்வின் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments