நித்திரவிளை அருகே நடைக்காவு கொட்டக்குளத்தில் நேற்று மதியம் கவிழ்ந்த நிலையில் ஒரு உடல் மிதந்தது. இதை பார்த்த பொதுமக்கள் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்திய போது, வாவறை நடுதல் விளை பகுதியை சேர்ந்த மரிய ரோசா (80), என்பவரை கடந்த 2 தினங்களாக காணவில்லை என தெரிய வந்தது. இதையடுத்து அவரின் மகன்களை அழைத்து சென்று உடலை காட்டிய போது தனது தாயார் தான் என உறுதிப்படுத்தினர். இது குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரிய ரோசா தற்கொலை செய்து கொண்டாரா? குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments