சொத்து தகராறில் வாலிபர் மீது தீ வைத்த சகோதரர்கள்!

சொத்து தகராறில் வாலிபர் மீது தீ வைத்த சகோதரர்கள்!

in News / Local

குலசேகரம் அடுத்துள்ள பிணந்தோடு பகுதியை சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஜாண்சன், டென்சன் என 2 மகன்கள் உள்ளனர். 2வது மனைவிக்கு அகஸ்டின், ஜெஸ்டின் என 2 மகன்கள் உள்ளனர். சார்லஸ் தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை 2வது மனைவியின் மகனமான ஜெஸ்டினுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென உயிலை ரத்து செய்துவிட்டு இடம் மற்றும் வீட்டை சார்லஸ் விற்பனை செய்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சார்லசின் முதல் மனைவியின் மகன்களான ஜாண்சன், டென்சன் இருவரும் சேர்ந்து அகஸ்டின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து குலசேகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top