தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு சேகரிப்பு!

தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு சேகரிப்பு!

in News / Local

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் விருப்ப மனுக்கள் பெற துவங்கியுள்ளனர். ஆனால், இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் கட்சி சார்பில் போட்டியில்லாத ஊராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சுயேட்சையாக தான் போட்டியிட வேண்டும், மக்களே நேரடியாகத் தேர்வு செய்வர். ஊதியம் இல்லை என்றாலும் பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிகமான பேர் போட்டி போடுவார்கள்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 5 ஆயிரத்திற்கும் குறைவான ஓட்டுகளே காணப்படுவதால், அரசியல் கட்சி சாராத தனி செல்வாக்கு வேண்டும். செல்வாக்கு இருந்தால் தான் தலைவராக வெற்றி பெற முடியும், தேர்தல் செலவு குறைவு வருமானம் அதிகம், ஆகையால் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே, சின்னம் இல்லாமலே தனியாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top