திருவட்டார் அருகே கடனை திருப்பி கேட்டதில் தகராறு - : 4 பேர் மீது வழக்கு!

திருவட்டார் அருகே கடனை திருப்பி கேட்டதில் தகராறு - : 4 பேர் மீது வழக்கு!

in News / Local

திருவட்டார் அருகே பெருஞ்சகோணம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்(45). தொழிலாளி. இவர் அப்பகுதி ஆண்கள் சுய உதவிக்குழுவில் சேர்ந்து ரூ.70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். ஆனால் தவணை தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். மேலும் குமரி குழு கூட்டத்துக்கும் செல்லாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அந்த சுய உதவிக்குழுவை சேர்ந்த செந்தில், ராஜ்குமார் இருவரும் பைக்கில் தர்மராஜ் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது.

இதில் தர்மராஜ் மற்றும் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபோல தர்மராஜ் கல்வீசி தாக்கியதில் அந்த பகுதியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஜோஸ் கிங்ஸ்லி ராஜா என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தர்மராஜ். ராஜ்குமார் இருவரும் தனித்தனியாக திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதில் தர்மராஜ் கொடுத்த புகாரின்பேரில் செந்தில், ராஜ்குமார் ஆகியோர் மீதும், ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ், அவரது மனைவி அனிதா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top