கோட்டார் சவேரியார் பேராயத்தில் இன்று தேர் பவனி

கோட்டார் சவேரியார் பேராயத்தில் இன்று தேர் பவனி

in News / Local

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. 8-ஆம் நாள் திருவிழாவான இன்று மாலை தேர் பவனி நடைபெறுகிறது. நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. 7-ஆம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

8-ஆம் நாள் திருவிழாவான இன்று மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர் பவனியும் நடைபெறும். நாளை 9-ம் நாள் திருவிழா. மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

திருவிழாவின் இறுதி நாளான 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நிறைவேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. 3-ஆம் தேதியன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர் திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும் பீச்ரோடு, ஆயுதப்படை முகாம் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர், செட்டிகுளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிகுளம் சந்திப்பு, இந்துக்கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் நாளை மதியம் 1 மணி முதல் 3-ஆம் தேதி திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top