இந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு - சீன அதிகாரிகள் நன்றி!

இந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு - சீன அதிகாரிகள் நன்றி!

in News / Local

எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் மனிதாபிமான சைகைக்கு சீன அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் எல்லையில் பல ஆயிரம் வீரர்கள் மற்றும் கனரக பீரங்கி உள்ளிட்ட ராணுவ தளவாடங்களையும் குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் வீரர்களை குவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி சீன பகுதிகளிலிருந்து 13 எருதுகள் மற்றும் 4 கன்று குட்டிகள் இந்தியாவின் அருணாசல பிரதேச எல்லைக்குள் வந்து விட்டது. இந்திய ராணுவ வீரர்கள் மனிதாபிமான அடிப்படையில் அந்த எருதுகள் மற்றும் கன்று குட்டிகளை சீனாவிடம் ஒப்படைத்தனர். இந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு சீனா அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிழக்கு கமாண்ட் தனது டிவிட்டரில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, 13 எருதுகள் மற்றும் 4 கன்று குட்டிகள் அருணாசல பிரதேசத்துக்குள் நுழைந்தன. அவற்றை செப்டம்பர் 7ம் தேதியன்று இந்திய ராணுவத்தினர் சீனா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு சீன அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர் என பதிவு செய்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top