கோவையில் நீதிமன்றம் வளாகத்திற்கு வெளியே சமூக நீதி வழக்கறிஞர்கள் மையத்தின் சார்பாக சைபர் தாக்குதலுக்கு உள்ளான கூடங்குளம் அனு உலை, நியூட்ரினோ, மீத்தேன் உலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி 20க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
மேலும் மாநில, மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பட்டது. கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன் எடுக்கும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதோடு திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜிதை மீட்க முடியாத அரசால், சைபர் தாக்குதலுக்கு கூடங்குளம் தாக்கப்பாட்டால் அதை எப்படி எதிர்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.
0 Comments