நாகர்கோவில் வெட்டூணிமடம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (23). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.காம். படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், சாமுவேல் என்பவருக்கும், அதே கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் இடையே யார் பைக்கில் வேகமாக செல்வது என்பது தொடர்பாக பிரச்சினை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கல்லூரி முடிந்து சாமுவேல், வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது ஏற்கனவே தகராறு செய்த மாணவர்கள் மீண்டும் வழி மறித்துள்ளனர்.
பின்னர் சாமுவேலை செங்கலாலும், கம்பாலும் சாமுவேலை சரமாரியாக தாக்கினர். இதில் சாமுவேல் படு காயம் அடைந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்திய மாணவர்கள் தப்பினர்.படுகாயம் அடைந்த சாமுவேல்,ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனும் திக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சாமுவேல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் நடத்திய மாணவர்கள் ராணித்தோட்டம் மற்றும் கரியமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
0 Comments