வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் மாதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். மீன்பிடி தொழிலாளி. இவரது மகன் விஜித்ராஜ் (19). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி விஜித் ராஜ் வெளியே விளையாட சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்தவித தகவலும் இல்லை .
இதையடுத்து அதிர்ச்சி அடைந்ததாயார் வசந்தா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஜித் ராஜை தேடி வருகின்றனர்.
0 Comments