இளம்பெண்ணுக்கு காதல் தொந்தரவை தட்டிக்கேட்ட அரசு பஸ் கண்டக்டரை கார் ஏற்றி கொல்ல முயற்சி : 3 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணுக்கு காதல் தொந்தரவை தட்டிக்கேட்ட அரசு பஸ் கண்டக்டரை கார் ஏற்றி கொல்ல முயற்சி : 3 பேர் மீது வழக்கு

in News / Local

மார்த்தாண்டம் அருகே நல்லூர் கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ், வயது 46. அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அனில் (23), முருகதாஸின் உறவினரை அனில் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். தொடரந்து அந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை முருகதாஸ் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுவே நாளடைவில் முன்விரோதமாக மாறி உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகதாஸ் பைக்கில்சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த அனில், அனீஷ், ஸ்டாலின் ஆகியோர் பைக் மீது மோதி உள்ளனர். பின்னர் முருகதாசை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் சேர்ந்து முருகதாசிற்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் தெரிகிறது.

இந்ததாக்குதலில் படுகாயம் அடைந்த முருகதாஸ் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தலைமறைவான 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top