கொரோனா முகாமிலிருந்து சுவர் ஏறி குதித்து பரோட்டா வாங்க கடைக்குச் சென்ற கொரோனா நோயாளி

கொரோனா முகாமிலிருந்து சுவர் ஏறி குதித்து பரோட்டா வாங்க கடைக்குச் சென்ற கொரோனா நோயாளி

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கொரோனா முகாமிலிருந்து தொற்றாளர் ஒருவர் பரோட்டா வாங்க சுவர் ஏறி குதித்து கடைக்குச் சென்று திரும்பியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் இல்லாததால், அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகம் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டு கொரோனா தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பள்ளியை ஒட்டியுள்ள வீட்டின் வழியாக கொரோனா நோயாளி ஒருவர் பரோட்டா வாங்க தப்பிச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. விசாரணையில் தொற்றாளர்கள் சிலர் அவ்வப்போது சுவர் ஏறி குதித்து கடைகளுக்குச் சென்று திரும்பியது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top