காங்கிரஸ் கட்சி சார்பில் கோரோனா தடுப்பு மருத்துவ குழு அமைப்பு.! நாகர்கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது:

காங்கிரஸ் கட்சி சார்பில் கோரோனா தடுப்பு மருத்துவ குழு அமைப்பு.! நாகர்கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது:

in News / Local

குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மறைந்த எம்.பி., ஹெச்.வசந்தகுமார் அலுவலத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் கோவிட் உதவி மைய மருத்துவ குழு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பினுலால் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய்வசந்த் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆணைப்படியும், மாநில தலைவர் கே.எஸ்.

அழகிரியின் அறிவுறுத்தலின்படியும் குமரி மாவட்டத்தில் கோரோனா தடுப்பு மருத்துவ குழு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் மற்றும் விஜயதரணி,காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top