அருமனை அருகே சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கேரளாவை சேர்ந்தவர்!

அருமனை அருகே சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கேரளாவை சேர்ந்தவர்!

in News / Local

அருமனை ஆலறவிளை பகுதியில் உள்ள ஒரு நீரோடையில் நேற்று முன்தினம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஓன்று மிதந்து வந்தது. அருமனை போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியை சேர்ந்த ஆடு வியாபாரி வர்க்கீஸ் (60) என்பவரைகாணவில்லை என வெள்ளறடை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து வர்க்கீசின் உறவினர்களை அழைத்து வந்து போலீசார் காண்பித்தனர். அப்போது அது மாயமான வர்க்கீஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top