கர்ப்பிணியை தாக்கியதை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கர்ப்பிணியை தாக்கியதை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

in News / Local

புதுக்கடை அருகே கீழ்குளம் காட்டுவிளையை சேர்ந்தவர் பொடிக்குட்டி இவரது மனைவி லில்லி (50). இவரது வீட்டின் எதிர்புறத்தில், உதய மார்த்தாண்டம் தேவிகோட்டையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 1ம் தேதி செல்வகுமார் தனது மனைவியின் தங்கையை அடித்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு, லில்லி செல்வகுமாரிடம் ஏன் கர்ப்பிணியை அடிக்கிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் லில்லியை அடித்து உதைத்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை ஆபாசமாக பேசி கொலை செய்வதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக லில்லி புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top