கணவருடன் தகராறு வீட்டை விட்டு வெளியேறி பெண் மாயம்…கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார ?

கணவருடன் தகராறு வீட்டை விட்டு வெளியேறி பெண் மாயம்…கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார ?

in News / Local

குமரி மாவட்டம் மேல மணக்குடி பகுதியை சேர்ந்தவர் சகாயடிலானி (28). இவரது கணவர் ஆரோக்கிய தாசன். இந்த தம்பதியருக்கு ஆரோக்கிய ஜினோத் (10) என்ற மகனும் , சகாய ஜிகா (11) என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவர் ஆரோக்கிய தாசனிடம் தகராறு செய்து கொண்டு ஒரு வருடம் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருடன் சகாயடிலானி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

தொடர்ந்து பெற்றோர்கள் சகாயடிலானியிடம் சமரசம் பேசி கணவர் ஆரோக்கிய தாசனுடம் வாழ ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் கடந்த இரண்டு வாரமாக கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த சகாயடிலானி நேற்று மாலை முதல் மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது கணவர் ஆரோக்கிய தாசன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சகாயடிலானியை தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top