மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (35), ஞாறாம்விளையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சுதா (30). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அஜித் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். மேலும் கடன் தொல்லையும் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று அஜித் பிராந் தியில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஜித் இருதினங்களுக்கு முன்பும் இதுபோல் விஷம் குடித்துள்ளார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில் இரண்டாம் முறையாக விஷம் குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
0 Comments