பூதப்பாண்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை!

பூதப்பாண்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை!

in News / Local

பூதப்பாண்டியை அடுத்துள்ள கீழ ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (63). கடந்த மூன்று வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறியில் தூக்கு போட்டு தற் கொலை செய்துள்ளார்.

மாலை வீடுதிரும்பிய குடும்பத்தினர் அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அவரது மகன் சக்தி சுந்தரம் (31) பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top