குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சர்வதேச கள்ள நோட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ரூ.77000 மதிப்பிலான ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை மாற்ற முயன்றபோது அவர்கள் காவல்துறையினரிடம் சிக்கினர்.
கைதான கேரளாவைச் சேர்ந்த சவுத் என்பவர் விசாரணையின் பொது அளித்த தகவலின்படி மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்து ரூ.200, ரூ.500 கள்ளநோட்டுகள் அச்சிடும் எந்திரங்கள் பரிமுதல் செய்யப்பட்டன.
இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments