மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்த மிக்கேல் நாயகம் மகன் சச்சின் (14). சகாயராஜன் மகன் சகாய ரெகின்(12), ஸ்டேன்டர் என்ற ரமேஷ் மகன் ரகித் (13) ஆகிய 3மாணவர்களும் கடந்தசில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் கிரிக்கெட் விளையாடினர். அப்போது பந்து கடலில் விழுந்தது. அதை எடுக்க முயற்சித்த போது கடலில் மூழ்கி பலியாயினர்.
இந்த தகவல் அறிந்ததும் மாணவர்களின் வீட்டிற்கு எம்.எல்.ஏ.பிரின்ஸ் நேரில் சென்று மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் 3 மாணவர்களின் குடும் பத்தினருக்கும் பிரின்ஸ் எம்எல்ஏ நிதியுதவி வழங்கினார். இதில் கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதா கிருஷ்ணன், வட்டார தலைவர் கிளாட்சன், கல்லுக்கூட்டம் பேரூர் தலைவர் மனோகரசிங், பேரூராட்சி முன்னாள் தலைவர் மேரி ஹெலன் அந்திரேசா, ஜெபஷீலா, குளச்சல் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்வீட்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
0 Comments