தந்தையே தனது இரண்டு குழந்தைகளை மலை உச்சியிலிருந்து தூக்கிவீசி கொலை செய்த சம்பவம் மக்களிடையே மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லிமலை குண்டூர் நாடு அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி. அவரது மனைவி பாக்கியம். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
குடும்ப பிரச்னை காரணமாக சிரஞ்சீவி தனது மகன் ஸ்ரீராஜ் (8), மகள் கவியரசி (5) ஆகிய 2 குழந்தைகளையும் செம்மேடு சீக்குப் பாறையிலுள்ள வியூ பாயிண்ட் மீது ஏரி சுமார் 150 அடி பள்ளத்தில் இரண்டு குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார். இந்த காட்டுமிராண்டி சம்பவத்தினால் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்த போன குழந்தைகளின் சடலத்தை வாழவந்தி நாடு போலீசார் தேடி வருகின்றனர்.
0 Comments