மார்த்தாணடம் அருகே , வியாழக்கிழமை இரவு அன்று வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சுமை வாகனத்துக்கு தீ வைத்த தப்பி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன், வயது 51. இவர் சுமை வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். வியாழக்கிழமை அன்று இரவு வழக்கம் போல் தனது வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்டர். இந்நிலையில் நள்ளிரவில் வில்சனின் சுமை வாகனத்துக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர், சத்தம் கேட்டு பதறி அடித்து கொண்டு வெளியே வந்த வில்சன் தனது வண்டியில் தீ பிடித்து எரிவதை கந்து அதிர்ச்சி அடைந்தார்,
உடனடியாக, வில்சன், வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும், வாகனத்தின் இருக்கைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து. இது குறித்துமார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments