குமரி, மாங்குழி அருகே பைனான்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!

குமரி, மாங்குழி அருகே பைனான்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!

in News / Local

திங்கள் சந்தை பெரியாபள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன். 47 வயதான இவர் அந்த பகுதியில் பைனான்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். மாங்குழி பகுதியை சேர்ந்தவர் ஞான அருள் சேவியர். இவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 15 நாட் களுக்கு முன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலை யில் நேற்று முன் தினம் மதியம் மோகன் மாங்குழி ரோட்டில் ஆட்டோவில் வந்துள்ளார். அவருடன் 2 பேர் உடன் வந்தனர். அப்போது ஞான அருள் சேவியர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி மோகனிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவரை அவதூறாக பேசி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மோகன் படுகாயம் அடைந்தார். மோகனுடன் வந்தவர்கள் அவரை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து மோகனின் மனைவி மேரி ஜெலஸ்டின் சுதா இரணியல் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, ஞான அருள் சேவியர் மீது வழக்குப்ப திவு செய்தனர்.
இது போல் ஞான அருள் சேவியர் இரணியல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், மாங்குடி ரோட்டில் வரும் போது தன்னை தடுத்து நிறுத்தி மோகன் அரிவாளால் வெட்டியதாக கூறியுள்ளார். அவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் மோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது போலீசார் இரு தரப்பு புகார் குறித்தும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top