திருவட்டாறு கோவிலில் கொடியேறியது.

திருவட்டாறு கோவிலில் கொடியேறியது.

in News / Local

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா மற்றும் பங்குனி திருவிழா நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா திங்கள்கிழமையான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் தந்திரி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமிக்கு ஆறாட்டு, பள்ளி வேட்டை நடைபெறுகிறது. முன்னதாக திரு அம்பாடியில் கிருஷ்ணன் கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top