கோவையில் நண்பர்களுடன் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவி நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 26 ஆம் தேதி மாலை அவரது ஆண் நண்பர்கள் 4 பேருடன் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக ஐஸ்வர்யா நகரில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். பார்ட்டி முடிய இரவு நேரமாகியுள்ளது. அப்போது, அங்கிருந்த மணிகண்டன் என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்துள்ளார். அந்த மாணவி கூச்சலிட்டும் அவளின் நண்பர்கள் யாரும் மாணவனை தடுக்காமல் அதற்கு உடந்தையாக இருந்தள்ளனர். அதனால் மணிகண்டன் தொடர்ந்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்ததாகவும் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர், மாணவியின் நண்பர்களான ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 Comments