மார்த்தாண்டம் அருகே மாயமான இளம் பெண் காதலுடன் மீட்பு!

மார்த்தாண்டம் அருகே மாயமான இளம் பெண் காதலுடன் மீட்பு!

in News / Local

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜினிஷா மலர் (19). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை . உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை .

இதையடுத்து பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்த அருள்ராஜ்(23) என்ற கட்டிடத் தொழிலாளியுடன் ஜினிஷா மலர் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அருள்ராஜ் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர். இதையடுத்து இரு வீட்டு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காதல் ஜோடிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top