கருங்கல் அடகுக்கடை கொள்ளையர்கள் கேரளாவில் பதுங்கல்!

கருங்கல் அடகுக்கடை கொள்ளையர்கள் கேரளாவில் பதுங்கல்!

in News / Local

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் ராஜ் (32). இவர் கருங்கலில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இவரது அடகுகடையில் கொள்ளையர்கள் புகுந்து 25 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போன்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின முதல் கட்ட விசாரணையில் கொள்ளையனின் மணிபர்ஸ் மற்றும் திருடுவதற்காக பயன்படுத்திய 4 அடிநீள இரும்பு கம்பி கடைக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், கேரளா சினிமா தியேட்டர் டிக்கெட் இருந்துள்ளது. மற்றபடி எதுவும் அதில் இல்லை . இதனை தொடர்ந்து போலீசார் அடகுகடை பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில், கடையின் முன்ருந்த பைக்கில் ஒருவர் ஏறி மார்த்தாண்டம் நோக்கி செல்வது தெரிய வந்தது. ஆனால் அந்த நபரின் உருவம் சரிவர தெரியவில்லை .

இதையடுத்து போலீசார் திருட்டுபோன செல்போனின் எண்களை தொடர்பு கொண்ட னர். அப்போது அவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என மலையாளத்தில் கூறியுள்ளது. எனவே கொள்ளையன் திருடிவிட்டு கேரளா தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top