திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் 2 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று , நாளை என இரண்டு நாட்களுக்கு கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கல் மூடப்படுவதாகவும், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பேரிஜம் ஏரிக்க செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கொடைக்கானலுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வரவேண்டாம் என்று கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments