மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் 10 லேப்-டாப்கள், பணம் திருட்டு!

மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் 10 லேப்-டாப்கள், பணம் திருட்டு!

in News / Local

மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் சி.எஸ்.ஐ.வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 3-வது தளத்தில் மார்த்தாண்டம் அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்த சுனில்குமார்(வயது 42) என்பவர் கணினி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுனில்குமார் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீடு சென்றார்.

நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்த சுனில்குமார், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மேஜையில் வைத்திருந்த ரூ.85 ஆயிரம், 7 விலை உயர்ந்த புதிய ேலப்-டாப்கள் மற்றும் பழைய லேப்-டாப்கள் திருட்டுபோய் இருந்தன.

இதுபற்றி சுனில்குமார் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் முதல் தளத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த பென்சிகர் என்பவரது எலக்ட்ரானிக் கடையில் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், அங்கிருந்த டார்ச் லைட் மற்றும் பொருட்களை திருடிவிட்டு வெளியே வருவதும் ெதரியவந்தது.

பின்னர் அந்த வாலிபர் 3-வது தளத்தில் உள்ள சுனில்குமாரின் கடைக்குள் புகுந்து மேஜையில் இருந்த பணத்தை எண்ணுவதும், பிறகு 10 லேப்-டாப்களை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது. அதிகாலை 2½ மணியில் இருந்து 5½ மணி வரை 3 மணிநேரம் உள்ளே இருந்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு மோப்பநாய் ‘ஓரா’ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கடையில் இருந்து மோப்பம் பிடித்து குழித்துறை ரெயில்நிலையம் வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து சுனில்குமார், பென்சிகர் ஆகியோர்் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள வாலிபரின் உருவத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பல திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு வாலிபரின் தந்தையை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top