தடம் எண் 12 பி, 6பி அரசு பஸ்கள் வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை வழியாக முறையே திங்கள் நகர் மற்றும் தக்க லைக்கு பல ஆண்டுகளாக இயங்கி வந்தன. இந்நிலையில் இந்த பஸ்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டுள் ளன. இதனால் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் கடும் அ வதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஸ்கள் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் இயக்க கோரியும் வில்லுக்குறி குருசடிசந்திப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது. அகில இந்திய தொழிற் சங்க ைமய கவுன்சில் மாவட்ட தலைவர் சுசீலா தலைமை வகித்தார்.
கிளை செயலாளர் மிக்கேல் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜோதி தாஸ், சங் கர், கணபதி, டேவிட், குமாரசுவாமி, கோபகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரணியல் போலீசார் சம்பவ இடத்தில பாதுகாப்பில் ஈடுபட்டுருந்தனர்.
0 Comments