மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்!

மது அருந்த பணம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்!

in News / Local

தக்கலை அருகே உள்ள மணக்கரையை அடுத்த பரப்புவிளையைச் சேர்ந்த ராஜன் (38). இவர் கொல்லன்விளையில் பஸ் ஏற நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவர் குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்க மறுக்கவே கம்பால் அடித்து தாக்கியுள்ளார். காயமடைந்த ராஜன் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top