மணவாளக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது!

மணவாளக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது!

in News / Local

மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட் டிருந்தனர். படர்நிலம் பகுதியில் சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர். சுதாரித்த போலீசார் அதில் ஒருவரை விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் (56) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர் மணி(50) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காளியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top