மூவாற்றுமுகம் அரங்கன்விளையை சேர்ந்தவர் சென்றல் சிங்(40). இவர் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் சிட்பண்ட் நிறுவன ம் நடத்தி வருகிறார். திருவிதாங்கோட்டை சேர்ந்த பீட்டர் கிளாரட் வறுவேல் என்பவர் இந்த நிறுவனதில் பங்குதாரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அவர் பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த சிட் பண்ட் நிறுவனத்தின் லோகோ தனக்கு சொந்தமானது என பீட்டர் கிளாரட் வறுவேல் ஆன்லைனில் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்துள்ளர். இதுகுறித்து அறிந்த மார்த்தாண்டம் கண்ணக்கோட்டை சேர்ந்த பிராங்கிளின் ஜெகன் ராஜ்(40) என்பவர் வாட்ஸ் -அப் உட் பட சமூக வலைத்தளங்களில் அந்த சிட் பண்ட் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். இது குறித்து சென்றல் சிங் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிராங்கிளின் ஜெகன் ராஜை கைது செய்தனர்.
0 Comments