மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கல்லுக்கூட்டம் உழிஞ்ஞவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கென்னடி (45), அதே பகுதி சுந்தரம்காட்டுவிளையை சேர்ந்தவர் மணி, அவரின் மகன் காட்வின்(29). குட்டன்விளையை சேர்ந்தவர் கொச்சுண்ணி(35), இவர்களுக்கும், ஜாண் கென்னடி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை, காட் வின் மற்றும் கொச்சுண்ணி இருவரும் ஜாண் கென்னடி வீட்டில் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசி கதவு மற்றும் செடித்தொட்டிகளை அடித்து உடைத்துள்ளனர். மேலும் ஜாண் கென்னடியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து ஜாண் கென்னடி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments