பூட்டிய கடையில் புகுந்து ஒரேயொரு செல்போனை மட்டும் திருடிய கொள்ளையன்!

பூட்டிய கடையில் புகுந்து ஒரேயொரு செல்போனை மட்டும் திருடிய கொள்ளையன்!

in News / Local

பூட்டை உடைத்து கடைக்குள் அதிரடியாக புகுந்து சென்று, ஒரேஒரு செல்போனை மட்டும் கொள்ளையன் திருடிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் தனது வீட்டிற்கு அருகிலேயே செல்போன் விற்பனை செய்யும் கடையை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது கடை உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், மொத்தமாக செல்போன்களை கொள்ளையன் திருடிச் செல்லவில்லை.

கடையில் இருந்து ஒரே ஒரு புதிய ரக செல்போன் மட்டும் தான் காணாமல் போனதாம்.அந்த இடத்தில் வேறொரு பழைய செல்போன் இருப்பதையும் கடையின் உரிரமையாளர் ஜானகிராமன் கண்டார். கொள்ளையடிக்க வந்த நபர் கல்லா பெட்டியை திறக்கவில்லை.

இதற்கு பின்னர் உடனே ஜானகிராமன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நடந்தவற்றை குறித்து ஜானகிராமனிடம் கேட்டறிந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போனை திருடி சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top